-
-

சமுதாய மாற்றத்திற்கான வலிமையான ஆயுதம் கல்வியே!



அருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...!
இன்றைய உலகம் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு
முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. எத்தனை எத்தனையோ புதிய, புதிய
கண்டுபிடிப்புகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஆகாயத்தில் பறக்க
கற்றுக்கொண்ட மனிதன், இன்று அதையும் தாண்டி வேறு கண்டங்களில்
வசிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றான். அதுபோல, இன்று
அறுவை சிகிச்சை முறைகளும் புதிய முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதனின் முக்கிய உறுப்பான இதயத்தில் கூட பல்வேறு
அறுவை
சிகிச்சைகள் நடைபெறுகின்றன. என்ன அதிசயம்...!
இப்படி வளர்ச்சியை நோக்கி ஒட்டு மொத்த சமுதாயமும்
நடைபோட்டுக் கொண்டிருக்கையில் நாம் (முஸ்லிம் சமுதாயம்) எங்கு
இருக்கின்றோம்..? என்ன செய்து கொண்டிருக்கின்றோம், நாம்? சச்சார்
கமிட்டி அறிக்கையில் மிக தெளிவாக முஸ்லிம் சமுதாயம் பின்தங்கியிருப்பது படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இன்னும் நம்
சமுதாயத்தில் கல்வி கற்பதற்கான விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்துக்கின்றோமே தவிர, ஒவ்வொரு துறையிலும் நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய உணர்வு நம்மிடம் இல்லை. ஒரு பக்கம் நம்முடைய தேவைகளோ ஏராளம். அதாவது சத்தியத்தை மக்களுக்கு
சொல்ல வேண்டுமானால் நாம் அனைத்து துறைகளிலும் செயல்பட
வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அனைத்து மக்களையும்
சென்று சேரக்கூடிய ஏதாவது துறைகளில் நம்முடைய பங்களிப்பு மிக
முக்கியமானதாக இருக்கின்றதா? இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும்பத்திரிக்கை, பொருளாதரம், சட்டம், அரசியல், ஊடகம்...
இன்னும் மனிதவளம் சார்ந்த பல்வேறு துறைகளில் நாம் எங்கு
இருக்கின்றோம்தமிழ் உலகுக்கு நாம் சத்தியத்தை எப்படி சமர்ப்பிக்க
இருக்கின்றோம்எப்படி நம் தூய வாழ்வின் மூலம் நம் சகோதர சமுதாய
நண்பர்களுக்கு இஸ்லாத்தை சமர்ப்பிக்கின்றோமோ, அதே போன்று
இன்றைய தொழில்-நுட்பத்தின் வாயிலாகவும் இஸ்லாத்தை சமர்ப்பிக்க
வேண்டியது மிக அவசியமான ஒன்று.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆரம்ப கட்டத்தில் இறைவனின்
பக்கம் மக்களை எவ்வாறு அழைத்தார்கள்? உயரமான மலையில் ஏறி
நின்று தானே இஸ்லாத்தை பிரகடனம் செய்தார்கள். உயரமான
மலைகளில் ஏறி நின்று ஆடைகளை கழற்றி ஒரு செய்தியை கூறுவது
என்பது அன்றைய அரபுமக்களின் வழிமுறை. அந்த முறையை நபிகளார்
பின்பற்றியது மட்டுமல்லாமல், ஆடைகளை கழற்றாமல் மாற்றம்
செய்தது இஸ்லாமிய வழிமுறை. அன்றைய தொடர்பு சாதனத்தை
நபிகளார் பின்பற்றியதுதான் இந்த சம்பவம் கூறும் செய்தி.
முஸ்லிம் சமுதாயம் வழிநடத்தக்கூடிய சரியான, முறையான
செய்தித்தாள்களோ, வார இதழ்களோ, மாத இதழ்களோ, தொலைக்-
காட்சி சேனல்களோ, பள்ளி, கல்லூரிகளோ, ஆய்வுக்கூடங்களோ
நம்மிடத்தில் இல்லை. அப்படியிருந்தாலும் அனைத்து மக்களையும்
சென்று சேர்வதில்லை. பிறகு எப்படி நம்மால் இஸ்லாத்தை
அனைவருக்கும சமர்ப்பிக்க முடியும்? மற்றொரு பக்கம் இன்று
எல்லாத்துறைகளிலும் பொய், மோசடி, ஊழல், இலஞ்சம் என அனைத்து
தீமைகளும் தலைவிரித்தாடுகின்றன. உதாரணத்திற்கு பத்திரிககைளிலே
இன்று அதிகமான செய்திகள் பொய்யாக புனைந்துரைக்கப்படுகின்றன.
மக்களுக்கு நீதி, நியாயம் அடிப்படையில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு
சிறந்த பத்திரிக்கைகள் நம் தமிழ் சமூகத்திற்கு இல்லை. அதே போன்று
இன்று நடைபெறக்கூடிய ஆராய்ச்சிகளிலும், ஆராய்ச்சியின் முடிவுகளிலும்
பல்வேறு தவறுகளும் நடைபெறுகின்றன. இந்நிலை
மாற்றப்பட வேண்டாமா? இறையச்சமுள்ள, நல்லொழுக்கமுள்ள
நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய முஸ்லிம்கள் ஏன்
இன்னும் அரசியலிலும், அதிகாரத்திலும் அமராமல் இருக்கின்றோம்..!
நம்மிடம் அழகான வங்கி முறை இருக்கின்றது.! ஆனால் நமது
வங்கிமுறையை அமல்படுத்துவதற்கு ஏற்ற பொருளியில் நிபுணர்கள்
நம்மிடம் எத்தனை பேர் இருக்கின்றனர்..? மிகச்சிறந்த அரசியல்
அமைப்பும், சட்டமும் நம்மிடம் இருக்கின்றது. நம்மிடம் எத்தனை
அரசியல்வாதிகளும், சட்ட நிபுணர்களும் இருக்கின்றனர்..? எந்த
துறையை பற்றி இஸ்லாம் பேசவில்லை..? எல்லாத் துறை-களுக்குமான
சிறந்த வழிகாட்டுதல்கள் குர்ஆனிலும், நபிகளாரின் வாழ்விலும்
பொதிந்து இருக்கின்றன. ஆனால் அதனை உரத்து சொல்வதற்கு
குர்ஆனையும், அறிவியலையும், பொருளாதாரத்-தையும், சட்டத்தையும்
படித்து கைதேர்ந்தவர்கள் நம்மிடம் இல்லை. எந்த துறையைப்பற்றி நாம்
கருத்து கூறினாலும் நாம் அதிலே நிபுணர்களாக (P.hd முடித்தவர்களாக)
இருந்தால் மட்டும்தான் நம் கருத்து அங்கீகரிக்கப்படும்.
நம்மிடம் இருக்கின்றார்களா நிபுணர்கள்?

என்ன செய்ய வேண்டும்?
நம் சமூகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாணவனையும்,
மாணவியரையும் படிப்பதற்காக ஊக்குவிக்க வேண்டும். பள்ளிப்படிப்பிற்காக
மட்டும் அல்ல; மாறாக அனைவரும் அவரவர்கள் துறையில்
ஆய்வு (Research) செய்து முனைவர் (Doctorateபட்டம் பெற வேண்டும்.
எகிப்தில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதற்கான ஒரு முக்கிய காரணம்
இதுவுமாகும்இக்வானுல் முஸ்லிமீன் என்ற இஸ்லாமிய இயக்கத்தின்
தற்போதைய தலைவர்Dr.அஹமது பதி அவர்கள் குர்ஆனை முழுவதும்
மனனம் செய்தவர் மட்டுமல்ல; கால்நடை அறிவியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த 100 ஆய்வாளர்களில்
இவரும் ஒருவர். இப்படிப்பலர் அந்தப் பேரியக்கத்தில் குர்ஆனை
முழுவதும் மனனம் செய்தும், பல துறைகளில் ஆய்வு செய்தும் உள்ளனர்.
இது போன்றதொரு மாற்றம் நம் மாணவர்கள் அனைவரிடத்திலும் வர
வேண்டும். இலட்சிய உணர்வோடு, இஸ்லாத்தை மேலோங்க செய்ய
வேண்டும் என்ற உணர்வோடு கல்வி கற்க வேண்டும்.
9, 10-ம் நூற்றாண்டில் அறிவியல் உலகமே முஸ்லிம்களின்
கைகளில்தான் இருந்தன. இப்னு சினா - நவீன மருத்துவ அறிவியலின்
தந்தை என அழைக்கப்படுபவர். இவர்தான் முதன்முதலில் அறுவை
சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார். இவரின் பல முக்கிய புத்தகங்கள்
இன்றும் மருத்துவ உலகுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதே
போன்று முஹம்மது இப்னு மூஸா அல் க்வாரிஜ்மி (இயற்கணிதம்),
அல்ஹஸன்(வானவியல்), முஹம்மத் இப்னு ஜகரிய்யா ராஜி(வேதியியல்),
இப்னு பஜ்ஜாஹ்(தத்துவம்) இன்னும் பல்வேறு துறைகளுக்கும்
அடித்தளமிட்டவர்கள் முஸ்லிம்கள். இவர்களைனைவரும்
குர்ஆனையும் முழுமையாக கற்றறிந்து பல்வேறு துறைகளில் ஆய்வுகளையும்மேற்கொண்டார்கள்.
குர்ஆனின் பல்வேறு வசனங்கள் நம்மை சிந்திக்க, ஆய்வுசெய்ய
தூண்டுகிறது. ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை
எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும், வானத்தைப்
பார்க்கவில்லையா, அவை எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளன என்று..!
மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு
ஊன்றப்பட்டுள்ளன என்று..! மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது
எவ்வாறு விரிக்கப்படுள்ளது என்று..!   (குர்ஆன் 88: 17-- - 20)

சகோதர, சகோதரிகளே..! வல்ல ரஹ்மான் மனிதனுக்கு தொழுகை,
நோன்பு, ஜகாத், ஹஜ் என்று இல்லாமல் ஏன் ஒட்டகம், வானம், பூமி,
மலை என்று இறைவனின் படைப்பாற்றலை சிந்திக்க தூண்டுகின்றான்.
இந்தப் படைப்புகளைக் குறித்து ஆழமாக ஆய்வு செய்யும் மனிதன் இந்த
வசனங்களின் மீது ஆழமான நம்பிக்கை கொள்வான். அதன்மூலம்
அவரின் இறைநம்பிக்கையும், இறையச்சமும் வலுப்பெறும் என்தில்
சந்தேகமில்லை. இந்த படைப்புகளைக் குறித்து இன்று பல்வேறு
துறைகளாக பிரித்தும், ஆய்வும் செய்யப்படுகின்றது.
அன்பிற்கினியவர்களே..! இன்று பல மாணவர்கள் எதாவது
படித்துவிட்டு வெளிநாடு செல்ல விரும்புகின்றார்கள். இன்னும் வேலை
வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வியை
கற்கின்றார்கள். இன்று நம்மில் பலர் பல துறைகளை கற்று அறிந்து
கொள்கின்றார்கள்; ஆனால் அவர்களுக்கு குர்ஆனை பற்றிய அறிவு
இல்லை. சிலர் குர்ஆனை கற்கின்றார்கள்; ஆனால் அவர்களுக்கு
அறிவியலோ, அரசியலோ, சட்டமோ தெரிவதில்லை. எப்போது நாம்
இந்த இரண்டையும் சேர்த்து கற்று ஆய்வு செய்கின்றோமோ, அப்போது
நாம் தான் பல துறைகளை வழிநடத்துவோம்.
இஸ்லாத்தை பிற்பற்றுவோம். இஸ்லாம் கூறும் கல்வி கற்போம்.

இஸ்லாத்தை மேலோங்க செய்வோம்.


M.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil

மாநிலத் தலைவர்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு

தமிழ் நாடு


Read more

CAMPUS CADRES MEET @ Chennai




Read more
E®ÃV[ç\lªòÂïVª ï_s c>sÝ Ø>Vçï
2013 - 2014
\Ý]B ¶«· JéD  \VWé ¶«·ïáV_ gõ|¼>V®D ÖüéVtBì, þòÝmkì, æÂþBì, AÝ>\>Ý]ªì \u®D
ÃVìE  \Vðk‡\VðsïÓÂz  kwºï©Ãâ|  kòD  E®ÃV[ç\lòÂïVª  ï_s  c>sÝ  Ø>VçïÂïVª
¶¤s©Aï^ Øk¹l¦©Ãâ|^áª.


c>sÝ Ø>Vçï   
¸ö¡
 >z]  

 sõð©¸Âï  ïç¦E  ¼>]  
A]B sõð©ÃD
 Am©¸Ý>_

Pre-Matric
Scholarship
1 gD  kz©A  x>_  
10 gD kz©A x½B  

gïüâ 18, 2013
 gïüâ 18, 2013

Post Matric
Scholarship

+1, +2, ITI,
ÖáWçé, xmWçé,
g«VFßE (ïçé ¶¤sB_)

ØÄ©¦DÃì 30,
2013

½ÄDÃì 12,  
2013

Merit Cum Means
Scholarship
ÖáWçé, xmWçé,
(Professional Courses)

ØÄ©¦DÃì 30,
2013

½ÄDÃì 31,  
2013


Ø{


Read more

கல்வி விழிப்புணர்வு பேரணி ,நாச்சியார்கோயில்

        இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் '' SIO கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்''  இறைருளால், மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் (அவர் மீது இறைசாந்தி உண்டாகட்டும் )  கூறினார்கள் ''கல்வி கற்பது ஒவ்வொரு ஆண் ,பெண் மீதும் கடமை '' என்று ,இன்று அரசு சொல்லும் கட்டாய கல்விச் சட்டத்தை, 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பிரகடனப்படுத்திவிட்டது. கல்வியை கொண்டே ஓர் வரலாற்றை ,மாற்றத்தை இம்மண்ணில் ஏற்படுத்த முடியும் என்பதில் மாற்றமில்லை..எனவேதான் SIO இந்தியா முழுவதும் ,தமிழகத்திலும் கல்வி விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது . அனைவருக்கம் கல்வி கொடுப்போம், அறியாமை இருளை ஒழிப்போம் ;கற்பது மடமை மறவாதே ;ஏழைக்கும் கல்வி தேவை 
அதுவே SIO-vin சேவை என முழக்கமிடுகிறது . 

               
 இம்முழக்கத்தின் ஒரு பகுதியாக , கும்பகோணம் ,நாச்சியார்கோயில் பகுதியில் கடந்த 8/06/2013 அன்று ''கல்வி விழிப்புணர்வு பேரணி '' நடைபெற்றது . SIO முன்னாள் தமிழக தலைவர் முனைவர்.ஹஜ் மொய்தீன் அவர்க கொடி அசைத்து பேரணியை துவக்கினார் .நாச்சியார்கோயில்  பொறுப்பாளர் ஜியாஹுதீன் தலைமை வகித்தார்,JIH நாச்சியார்கோயில் பொறுப்பாளர் ஜனாப்.ஷபீகூர் ரஹ்மான் , 


மேலும் மாநில செயலாளர்,H. சிக்கந்தர் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.  இறுதியாக, ஹஜ் மொய்தீன் அவர்களின் உரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.           

நெல்சன் மண்டேலாவின் கூற்றான ,  
 சமூக மாற்றத்திற்கான வலிமையான ஆயுதம் கல்வி ! ,இக்கல்வியை கொண்டு புது சமூகம்  படைப்போம் .


Read more

தாவா முகாம்,திருப்பூர்


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ,திருப்பூர் கிளையின் சார்பில் முஸ்லிம் அல்லாத,சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ,மதுரை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில்  ஒரு நாள்
 '' தாவா முகாம்'' நடைபெற்றது . இதில் இஸ்லாம் குறித்த மடக்கோலைகள்   வழங்கப்பட்டது .மற்றும் இறைவேதம் திருக்குர்ஆன் ,புத்தகங்கள் வழங்கல் நடைபெற்றது.வாழ்க்கை நெறியான இஸ்லாத்தின் வழிகாட்டல் பல நல்லுல்லங்களை சென்றடைந்தது. புகழ் அனைத்தும் ஏகனுக்கே !     


Read more

சிறந்த கலை நிகழ்வு விருது,நாச்சியார்கோயில்

       
        இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ,நாச்சியார்கோயிலில் இயங்கி வரும் கிரசென்ட் துவக்கப்பள்ளிக்கு ''சிறந்த கலை நிகழ்வு விருது  '' ''BEST CULTURAL ACTIVITIES  AWARD''வழங்கப்பட்டது . பள்ளியின் ஆண்டு விழாவில் அரேங்கேற்றப்பட்ட கலை நிகழ்சிகள் மிகவும் அழகாகவும் ,ஒழுக்க விழுமங்களின் அடிப்படையியலும் அமைந்தது .இந்நிகழ்வினால் ,இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உள்ளத்தில் கலை குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனை ஏற்படும் என்பதில் ஐயமில்லை . எனவே, SIO மாணவர்களை ஊக்கப்படுத்தவும் மேலும் இந்நிகழ்ச்சியை திறம்பட வடிவமைத்த ஆசிரியைகள்  மற்றும் நிர்வாகத்தை பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டது .



Read more

கோடை கால இஸ்லாமிய முகாம்

      இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு,தமிழகம்  சார்பில் கடந்த ஜூன் 1 & 2 (சனி ,ஞாயிறு ) ஆகிய நாட்கள் , பள்ளி &கல்லூரி மாணவர்களுக்கான '' கோடை கால இஸ்லாமிய முகாம் '' நாகை ,தெத்தியில் இறை அருளால் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோ .கமாலுதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.  முதலாவதாக , மாநில செயலாளர் சகோ .சிக்கந்தர் பாஷா அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் 

   
    இதில் மாநில தலைவர் சகோ.M.சையத் அபுதாஹிர் அவர்கள் கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினார்  மற்றும் இன்றைய கல்வி, மாணவர்கள் மற்றும் கல்வி வளாகங்களின்  நிலை குறித்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். தற்போதைய கல்வி திட்டத்தில் மாற்றம் வேண்டும் ,கல்வி வளாகங்கள் மற்றும் சமூகத்தில் காணப்படும் அநீதியை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும்   ன்றும் வலியுறுத்தினார். மேலும் நிகழ்சியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டது. ஜனாப்.அப்துல் ரசாக் அவர்கள் ,''நபிகளாரே முன் மாதிரி'' என்ற தலைப்பில் உரை வழங்கினார்.கமாலுதீன் அவர்கள் முஸ்லீமின் அடிப்படை கடமைகள் குறித்து விளக்கினார் ,இரவில் திறமைகளை அரங்கேற்றும் கலை நிகழ்வு நடை பெற்றது.அனைவரும் மிகவும் மகிழ்வுடன் கலந்துகொண்டனர். 

     
   இரண்டாம் நாள் அமர்வில் , கடற்கரைக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிரிந்தது. மேலும், ''இஸ்லாமிய இயக்க தலைவர்களின் வாழ்விலிருந்து '' எனும் தலைப்பில் சகோ.H.சிக்கந்தர் உரை வழங்கினார் ,சகோ.இம்ரான் ''அரபு வசந்தம் '' குறித்து தெளிவான பார்வை வழங்கினார் ,''கூட்டமைப்பும் அவசியமும் ''எனும் தலைப்பில் சகோ .தாவூத் அவர்களும் , SIOஒர் பார்வை -யை சகோ .சிராஜூல் ஹசன் வழங்கினார்கள் .


sio கல்வி விழிப்புணர்வு பேரணி :

        மக்களிடம் கல்வி  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி  நடைபெற்றது.
  

 கற்பது கடமை  மறவாதே!

 அனைவருக்கும் கல்வி கொடுப்போம்
 அறியாமை இருளை ஒழிப்போம்

 போன்ற வாக்கியங்களுடன் பேரணி சென்றது.  திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

         
சிறப்பாக குறிப்பு  டுத்தவர்களுக்கும், கலை நிகழ்வில் வெற்றிவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  


                                                             





மாநில மக்கள் தொடர்பு செயலாளர் சகோ .

  சிராஜுல் ஹசன் அவர்கள்  நிறைவுரை ஆற்றினார்.சகோ. ரியாஸ் அவர்களின் துஆ உடன் முகாம் நிறைவடைந்தது. எல்லா புகழும் இறைவனுக்கே . 

    




Read more