சமுதாய மாற்றத்திற்கான வலிமையான ஆயுதம் கல்வியே!
அஸ்ஸலாமு
அலைக்கும்(வரஹ்)...!
இன்றைய
உலகம் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு
முன்னேற்றங்களைக்
கண்டுள்ளது. எத்தனை எத்தனையோ புதிய,
புதிய
கண்டுபிடிப்புகள்
நம்மை பிரமிக்க வைக்கின்றன. ஆகாயத்தில் பறக்க
கற்றுக்கொண்ட
மனிதன், இன்று அதையும் தாண்டி
வேறு கண்டங்களில்
வசிப்பதற்கு
முயற்சி செய்து கொண்டிருக்கின்றான். அதுபோல,
இன்று
அறுவை சிகிச்சை முறைகளும் புதிய முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனிதனின்
முக்கிய உறுப்பான இதயத்தில் கூட பல்வேறு
அறுவை
சிகிச்சைகள்
நடைபெறுகின்றன. என்ன அதிசயம்...!
இப்படி
வளர்ச்சியை நோக்கி ஒட்டு மொத்த
சமுதாயமும்
நடைபோட்டுக்
கொண்டிருக்கையில் நாம் (முஸ்லிம் சமுதாயம்)
எங்கு
இருக்கின்றோம்..?
என்ன செய்து கொண்டிருக்கின்றோம், நாம்?
சச்சார்
கமிட்டி
அறிக்கையில் மிக தெளிவாக முஸ்லிம்
சமுதாயம் பின்தங்கியிருப்பது படம்பிடித்துக்
காட்டப்பட்டுள்ளது. இன்னும் நம்
சமுதாயத்தில் கல்வி கற்பதற்கான விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்துக்கின்றோமே தவிர, ஒவ்வொரு துறையிலும் நிபுணர்களை
உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய உணர்வு நம்மிடம்
இல்லை. ஒரு பக்கம் நம்முடைய தேவைகளோ
ஏராளம். அதாவது சத்தியத்தை மக்களுக்கு
சொல்ல வேண்டுமானால்
நாம் அனைத்து துறைகளிலும் செயல்பட
வேண்டியது மிகவும்
அவசியமான ஒன்று. அனைத்து மக்களையும்
சென்று சேரக்கூடிய
ஏதாவது துறைகளில் நம்முடைய பங்களிப்பு மிக
முக்கியமானதாக இருக்கின்றதா?
இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும். பத்திரிக்கை,
பொருளாதரம், சட்டம், அரசியல், ஊடகம்...
இன்னும் மனிதவளம்
சார்ந்த பல்வேறு துறைகளில் நாம்
எங்கு
இருக்கின்றோம்? தமிழ் உலகுக்கு நாம் சத்தியத்தை எப்படி
சமர்ப்பிக்க
இருக்கின்றோம்? எப்படி
நம் தூய வாழ்வின் மூலம்
நம் சகோதர சமுதாய
நண்பர்களுக்கு இஸ்லாத்தை
சமர்ப்பிக்கின்றோமோ, அதே போன்று
இன்றைய தொழில்-நுட்பத்தின் வாயிலாகவும் இஸ்லாத்தை சமர்ப்பிக்க
வேண்டியது மிக அவசியமான ஒன்று.
நபிகள்
நாயகம்(ஸல்) அவர்கள் ஆரம்ப
கட்டத்தில் இறைவனின்
பக்கம்
மக்களை எவ்வாறு அழைத்தார்கள்? உயரமான
மலையில் ஏறி
நின்று
தானே இஸ்லாத்தை பிரகடனம் செய்தார்கள். உயரமான
மலைகளில்
ஏறி நின்று ஆடைகளை கழற்றி
ஒரு செய்தியை கூறுவது
என்பது
அன்றைய அரபுமக்களின் வழிமுறை. அந்த முறையை நபிகளார்
பின்பற்றியது
மட்டுமல்லாமல், ஆடைகளை கழற்றாமல் மாற்றம்
செய்தது
இஸ்லாமிய வழிமுறை. அன்றைய தொடர்பு சாதனத்தை
நபிகளார்
பின்பற்றியதுதான் இந்த சம்பவம் கூறும்
செய்தி.
முஸ்லிம்
சமுதாயம் வழிநடத்தக்கூடிய சரியான, முறையான
செய்தித்தாள்களோ,
வார இதழ்களோ, மாத இதழ்களோ, தொலைக்-
காட்சி
சேனல்களோ, பள்ளி, கல்லூரிகளோ, ஆய்வுக்கூடங்களோ
நம்மிடத்தில்
இல்லை. அப்படியிருந்தாலும் அனைத்து மக்களையும்
சென்று
சேர்வதில்லை. பிறகு எப்படி நம்மால்
இஸ்லாத்தை
அனைவருக்கும
சமர்ப்பிக்க முடியும்? மற்றொரு பக்கம் இன்று
எல்லாத்துறைகளிலும்
பொய், மோசடி, ஊழல், இலஞ்சம்
என அனைத்து
தீமைகளும்
தலைவிரித்தாடுகின்றன. உதாரணத்திற்கு பத்திரிககைளிலே
இன்று அதிகமான செய்திகள் பொய்யாக
புனைந்துரைக்கப்படுகின்றன.
மக்களுக்கு
நீதி, நியாயம் அடிப்படையில் கருத்துக்களை
தெரிவிப்பதற்கு
சிறந்த
பத்திரிக்கைகள் நம் தமிழ் சமூகத்திற்கு
இல்லை. அதே போன்று
இன்று நடைபெறக்கூடிய ஆராய்ச்சிகளிலும், ஆராய்ச்சியின் முடிவுகளிலும்
பல்வேறு
தவறுகளும் நடைபெறுகின்றன. இந்நிலை
மாற்றப்பட வேண்டாமா?
இறையச்சமுள்ள, நல்லொழுக்கமுள்ள
நாட்டின் முன்னேற்றத்திற்காக
பாடுபடக்கூடிய முஸ்லிம்கள் ஏன்
இன்னும் அரசியலிலும்,
அதிகாரத்திலும் அமராமல் இருக்கின்றோம்..!
நம்மிடம்
அழகான வங்கி முறை இருக்கின்றது.!
ஆனால் நமது
வங்கிமுறையை
அமல்படுத்துவதற்கு ஏற்ற பொருளியில் நிபுணர்கள்
நம்மிடம்
எத்தனை பேர் இருக்கின்றனர்..? மிகச்சிறந்த
அரசியல்
அமைப்பும்,
சட்டமும் நம்மிடம் இருக்கின்றது. நம்மிடம் எத்தனை
அரசியல்வாதிகளும்,
சட்ட நிபுணர்களும் இருக்கின்றனர்..? எந்த
துறையை
பற்றி இஸ்லாம் பேசவில்லை..? எல்லாத்
துறை-களுக்குமான
சிறந்த
வழிகாட்டுதல்கள் குர்ஆனிலும், நபிகளாரின் வாழ்விலும்
பொதிந்து
இருக்கின்றன. ஆனால் அதனை உரத்து
சொல்வதற்கு
குர்ஆனையும்,
அறிவியலையும், பொருளாதாரத்-தையும், சட்டத்தையும்
படித்து
கைதேர்ந்தவர்கள் நம்மிடம் இல்லை. எந்த துறையைப்பற்றி
நாம்
கருத்து
கூறினாலும் நாம் அதிலே நிபுணர்களாக
(P.hd முடித்தவர்களாக)
இருந்தால்
மட்டும்தான் நம் கருத்து அங்கீகரிக்கப்படும்.
நம்மிடம்
இருக்கின்றார்களா நிபுணர்கள்?
என்ன செய்ய வேண்டும்?
நம் சமூகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாணவனையும்,
மாணவியரையும்
படிப்பதற்காக ஊக்குவிக்க வேண்டும். பள்ளிப்படிப்பிற்காக
மட்டும்
அல்ல; மாறாக அனைவரும் அவரவர்கள்
துறையில்
ஆய்வு (Research) செய்து
முனைவர் (Doctorate) பட்டம்
பெற வேண்டும்.
எகிப்தில் இஸ்லாமிய
புரட்சி ஏற்பட்டதற்கான ஒரு முக்கிய காரணம்
இதுவுமாகும். இக்வானுல்
முஸ்லிமீன் என்ற இஸ்லாமிய இயக்கத்தின்
தற்போதைய தலைவர்Dr.அஹமது பதி அவர்கள்
குர்ஆனை முழுவதும்
மனனம் செய்தவர்
மட்டுமல்ல; கால்நடை அறிவியல் துறையில்
முனைவர் பட்டம்
பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த 100 ஆய்வாளர்களில்
இவரும்
ஒருவர். இப்படிப்பலர் அந்தப் பேரியக்கத்தில் குர்ஆனை
முழுவதும்
மனனம் செய்தும், பல துறைகளில் ஆய்வு
செய்தும் உள்ளனர்.
இது போன்றதொரு மாற்றம் நம் மாணவர்கள்
அனைவரிடத்திலும் வர
வேண்டும்.
இலட்சிய உணர்வோடு, இஸ்லாத்தை மேலோங்க செய்ய
வேண்டும்
என்ற உணர்வோடு கல்வி கற்க வேண்டும்.
9, 10-ம்
நூற்றாண்டில் அறிவியல் உலகமே முஸ்லிம்களின்
கைகளில்தான்
இருந்தன. இப்னு சினா - நவீன
மருத்துவ அறிவியலின்
தந்தை என அழைக்கப்படுபவர். இவர்தான்
முதன்முதலில் அறுவை
சிகிச்சை
முறையை அறிமுகம் செய்தார். இவரின் பல முக்கிய
புத்தகங்கள்
இன்றும்
மருத்துவ உலகுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதே
போன்று
முஹம்மது இப்னு மூஸா அல்
க்வாரிஜ்மி (இயற்கணிதம்),
அல்ஹஸன்(வானவியல்), முஹம்மத் இப்னு ஜகரிய்யா ராஜி(வேதியியல்),
இப்னு பஜ்ஜாஹ்(தத்துவம்) இன்னும்
பல்வேறு துறைகளுக்கும்
அடித்தளமிட்டவர்கள்
முஸ்லிம்கள். இவர்களைனைவரும்
குர்ஆனையும் முழுமையாக
கற்றறிந்து பல்வேறு துறைகளில் ஆய்வுகளையும்மேற்கொண்டார்கள்.
குர்ஆனின்
பல்வேறு வசனங்கள் நம்மை சிந்திக்க, ஆய்வுசெய்ய
தூண்டுகிறது.
ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை
எவ்வாறு
படைக்கப்பட்டுள்ளன என்று! மேலும், வானத்தைப்
பார்க்கவில்லையா,
அவை எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளன என்று..!
மேலும்,
மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு
ஊன்றப்பட்டுள்ளன
என்று..! மேலும், பூமியைப் பார்க்கவில்லையா,
அது
எவ்வாறு
விரிக்கப்படுள்ளது என்று..! (குர்ஆன்
88: 17-- - 20)
சகோதர,
சகோதரிகளே..! வல்ல ரஹ்மான் மனிதனுக்கு
தொழுகை,
நோன்பு,
ஜகாத், ஹஜ் என்று இல்லாமல்
ஏன் ஒட்டகம், வானம், பூமி,
மலை என்று இறைவனின் படைப்பாற்றலை
சிந்திக்க தூண்டுகின்றான்.
இந்தப்
படைப்புகளைக் குறித்து ஆழமாக ஆய்வு செய்யும்
மனிதன் இந்த
வசனங்களின்
மீது ஆழமான நம்பிக்கை கொள்வான்.
அதன்மூலம்
அவரின்
இறைநம்பிக்கையும், இறையச்சமும் வலுப்பெறும் என்தில்
சந்தேகமில்லை.
இந்த படைப்புகளைக் குறித்து இன்று பல்வேறு
துறைகளாக
பிரித்தும், ஆய்வும் செய்யப்படுகின்றது.
அன்பிற்கினியவர்களே..!
இன்று பல மாணவர்கள் எதாவது
படித்துவிட்டு
வெளிநாடு செல்ல விரும்புகின்றார்கள். இன்னும் வேலை
வாய்ப்பைப்
பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வியை
கற்கின்றார்கள்.
இன்று நம்மில் பலர் பல
துறைகளை கற்று அறிந்து
கொள்கின்றார்கள்;
ஆனால் அவர்களுக்கு குர்ஆனை பற்றிய அறிவு
இல்லை.
சிலர் குர்ஆனை கற்கின்றார்கள்; ஆனால்
அவர்களுக்கு
அறிவியலோ,
அரசியலோ, சட்டமோ தெரிவதில்லை. எப்போது
நாம்
இந்த இரண்டையும் சேர்த்து கற்று ஆய்வு செய்கின்றோமோ,
அப்போது
நாம் தான் பல துறைகளை
வழிநடத்துவோம்.
இஸ்லாத்தை
பிற்பற்றுவோம். இஸ்லாம் கூறும் கல்வி
கற்போம்.
இஸ்லாத்தை
மேலோங்க செய்வோம்.
M.சையது அபுதாஹிர் M.Sc.,M.Phil
மாநிலத் தலைவர்
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு
தமிழ் நாடு
Read more

.png)














