Monday, May 21, 2012
Know your +2 Results
10:18 PM
IAS free Coaching
10:14 PM
SIO Coimbatore
Last date for online submission : June 20 2012 and
Entrance Exam date : July 1 2012
Further details please visit www.azhagiyakadanias.com
Wednesday, May 16, 2012
குன்னூரில் குதூகலம்
4:13 PM
SIO Tamilnadu Zone
தேர்ந்தெடுக்கபட்ட ஜூனியர் அபிமானிகளுக்கான இரண்டு நாள் முகாம் மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் குன்னூரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தடுக்கப்பட்ட ஜூனியர் அபிமானிகள் வருகை தந்தனர். sio திருப்பூர் மாநகர செயலாளர் சகோ. ஜெய்லானி அவர்களின் குர்ஆன் விளக்க உரையுடன் தொடங்கியது. JIH- ன் தமிழ்மாநில தலைவர் ஜனாப்.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு இஸ்லாமிய இயக்கத்தில் சிறுவர்களின் பங்களிப்பை பற்றி எளிமையாகவும் இனிமையாகவும் விளக்கினார்.
sio -ன் தமிழக தலைவர் தலைவர் சகோ.நூருல் ஹசன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
Welfare Party of India-வின் கோவை இளைஞரணி பொறுப்பாளர் சகோ. கலீலுர்ரஹ்மான் "நாம் ஏன் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பிறகு ஜூனியர் அபிமானிகளுக்கு பாட்டு மற்றும் பேச்சு போட்டி நடைபெற்றது அதில் ஜூனியர் அபிமானிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பிறகு மாலை மாணவர்கள் குன்னூர் sims பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் ஆர்வமுடன் பூங்காவின் அழகினை கண்டு களித்தனர்.
மஃரிப் தொழுகைக்கு பிறகு இளம்பிறை ஆசிரியர் சகோ.சலாஹுதீன் P.hD அவர்கள் "நாம் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும்" என்ற தலைப்பில் இனிய முறையில் உரை நிகழ்த்தி மாணவர்களின் சிந்தனைக்கு விருந்தளித்தார்.
இரவு உணவு இடைவேளைக்கு பிறகு கொட்டும் குளிரில் சகோ சலாஹுதீன் மற்றும் சிராஜ் தலைமையில் சூடான நாடகப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரது மனதையும் கவர்ந்து இழுத்தனர். சிறப்பான இந்த போட்டிக்கு பிறகு முதல் நாள் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் வகுப்புடன் இனிதே துவங்கியது இரண்டாம் நாள். சகோ சிராஜ் மற்றும் சகோ.இம்ரான் ஆகியோரின் தலைமையில் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு குர்ஆனில் உள்ள துஆவினை மனணம் செய்தனர். பிறகு paper collage மற்றும் wall magazine போட்டி நடைபெற்றது. மாணவர்கள் தங்கள் கருத்துக்களை சிறப்பான எழுத்து திறமை மூலம் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
சூடான காலை உணவிற்கு பிறகு சகோ.தவ்ஃபீக் அவர்களின் ஹதீஸ் விளக்கவுரையுடன் துவங்கப்பட்டது.
பிறகு சகோ.ஆசிப் அஹ்மத் அவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஜூனியர் அபிமானிகளின் அணுகுமுறைகள் பற்றி சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்.
பிறகு மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் creative writing போன்ற போட்டிகள் நடைபெற்றது. பிறகு "நம் தலைசிறந்த தலைவர் நபிகள் நாயகம் (ஸல்)" என்ற தலைப்பில் sio-ன் முன்னால் மாநில செயலாளர் சகோ.அஹ்மத் ஜலாலுதீன் அவர்கள் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார். அதன் பின் சகோ.தவ்ஃபீக் அவர்கள் விறுவிறுப்பான முறையில் வினாடி வினா போட்டியை நடத்தினார். இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேலைக்கு பிறகு sio-ன் முன்னால் ஜூனியர் அபிமானிகள் வட்ட ஒருங்கிணைப்பாளர் சகோ.அப்துர் ரஜாக் அவர்கள் "நம்மை படைத்த இறைவன்" என்ற தலைப்பில் உற்சாகமூட்டும் உரையை நிகழ்த்தினார்.
பிறகு sio மாநில செயலாளர் சகோ.சையது அபுதாஹிர் அவர்கள் ”அமைப்புடன் நாம்” என்ற தலைப்பில் உற்சாக உரை நிகழ்த்தினார் . போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு sio ஜூனியர் அபிமானிகள் வட்ட ஒருங்கிணைப்பாளர் சகோ.தாவூத் அவர்களின் நிறைவுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. இந்த இனிய அமர்வை சகோ.சிராஜுல் ஹசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்த இரண்டு நாள் முகாமில் தமிழகம் முழுவதில் இருந்தும் 80-க்கும் மேற்பட்ட தேர்ந்தடுக்கபட்ட ஜூனியர் அபிமானிகள் கலந்து கொண்டனர்.
Thursday, May 3, 2012
விடுமுறை வீணாகலாமா?
11:37 AM
SIO Tamilnadu Zone

Wednesday, May 2, 2012
குறும்பட பயிற்சிப் பட்டறை
12:22 PM
Students Corner
நிழல் - பதியம் அமைப்புகள் இணைந்து நடத்தும் குறும்பட பயிற்சிப் பட்டறை ஈரோட்டில் மே 8 முதல்14 வரை நடைபெற இருக்கின்றது. பயிற்சியின் போது 50 குறும்படங்கள், ஆவணப்படங்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்ற 7 திரைப்படங்கள் திரையிடப்படும். உணவு மற்றும் தங்குவதற்கு மட்டும் கட்டணம் உண்டு.
Tuesday, May 1, 2012
Monday, April 30, 2012
TNPSC EXAMS
4:41 PM
Students Corner
TNPSC Group IV Exam
12:41 PM
Students Corner
தமிழில்
http://www.tnpsc.gov.in/notifications/14_2012_not_tam_grp_iv_new1.படப்ஆங்கிலத்தில்
http://www.tnpsc.gov.in/notifications/14_2012_not_eng_grp_iv.pdf
Friday, April 27, 2012
VC's Meet at Madurai
6:03 PM
SIO Madurai
Sio's Zonal Secretary Br.Syed Abuthakir and Madurai City President Br.Riffayu met Dr.Kalyani Mathivanan,Vice Chancellor of Madurai Kamraj University.
Memento was rewarded to her by our Zonal Secretary.
Discussed about organisation's activities. She tend a great attitude towards the organisation's work.
Invited to "Iqrah-the expo to explore urself " by our City President Br.Riffayu. Accepted and acknowledged the invitation.
Lastly, She appreciated the sio's activities(Allahu Akbar).
Had a great in talking with her.
Thanks to all kind hearts for their continual support.
Thursday, April 26, 2012
ஜூனியர் அபிமானிகளுக்கான கோடை கால சிறப்பு முகாம்
12:05 PM
SIO Tamilnadu Zone
மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூனியர் அபிமானிகளுக்கான கோடை கால சிறப்பு முகாம் குன்னூரில் வருகின்ற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது. ஜூனியர் அபிமானிகளுக்கான முன்னால் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்வுகளும் அதற்கான சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.















