
- This event has passed.
வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்
April 4 - April 5

கண்டன ஆர்ப்பாட்டம் @ கோயம்புத்தூர், 04 ஏப்ரல், 2025
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட மசோதாவை கண்டித்து எஸ்ஐஓ கோவையின் சார்பாக கரும்புக்கடையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ முன்னாள் மாநில தலைவர் சகோதரர் சிக்கந்தர் பாட்சா அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.
சாலை மறியல் போராட்டம் @ திருச்சி, 05 ஏப்ரல், 2025
எஸ்ஐஓ திருச்சி சார்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து பாலக்கரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சகோ. முஹம்மது எஹியா பாஷா, மாநிலச் செயலாளர் சகோ. முஹம்மது ஜாஃபர் மற்றும் எஸ்ஐஓ திருச்சி மாவட்டத் தலைவர் சகோ. ரஹமத்துல்லா, சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் ஜனாப். கமாலுதீன், திருச்சி மாவட்டத் தலைவர் ஜனாப். ரியாஸ் மொய்தீன், வெல்ஃபேர் கட்சி மாவட்டத் தலைவர் ஜனாப். யாஷீன் மற்றும் திருச்சி மாவட்ட பொருப்பாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.