Loading....

Past Events

மாணவர்கள் ஒன்றுகூடல்: காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி

சென்னைப் பல்கலைக்கழகம்

எஸ்ஐஓ சென்னைப் பல்கலைக்கழகக் கிளைச் சார்பாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராகவும், காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாணவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. எஸ்ஐஓ தமிழகப் பொதுச்செயலாளர் ஃபாயிஸ், மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் நிஷாந்த் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

பொறுப்பாளர்கள் முகாம் 2024

திருச்சி

பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2024ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.  

பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்திப்பு

திருச்சி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்தித்தது. அமைச்சரிடம் நாம் சமீபத்தில் கையிலெடுத்த மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 1. ரமலான் பண்டிகைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாள் உள்ள தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும். 2. 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 3. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் உள்ள இந்துக் காட்டு […]

கருத்தரங்கம்: “பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?”

இணையவழி

எஸ்ஐஓ சார்பாக "பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?" என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் கல்வியாளர் வாஜித் ஷா கருத்துரை நிகழ்த்தினார்.

கருத்தரங்கம்: “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்”

இணையவழி

எஸ்ஐஓ சார்பாக “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஷாஹுல் ஹமீது உமரீ கருத்துரை நிகழ்த்தினார்.

IMAN ENCLAVE: ஜூனியர் SIO அபிமானிகள், பொறுப்பாளர்களுக்கான முகாம்

சென்னை

மாநில அளவில் ʾĪMĀN ENCLAVE எனும் ஜூனியர் SIO அபிமானிகளுக்கான முகாமும், ஜூனியர் SIO பொறுப்பாளர்களுக்கான முகாமும் நடைபெற்றது. இதற்கான பங்கேற்பாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்தனர். நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் குழு கள ஆய்வு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் வசித்துவரும் இந்துக் காட்டுநாயக்கர் என்ற சாதியைச் சார்ந்த மக்களுக்கு சாதிச் சான்றிதழ் சரியாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் அந்தச் சமுதாய மாணவர்கள் 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலை உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை வைத்தது எஸ்ஐஓ. நேற்று எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டது. இந்துக் காட்டுநாயக்கர் சமுதாயத்தினரையும், […]

Let’s Crack! Interview Skills Workshop

மதுரை

மதுரை இஸ்லாமிக் செண்டரில் Let's Crack என்ற நேர்காணலுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு SIO மாநில இணைச் செயலாளர் முஹம்மது முபீன், சாலிடாரிட்டி அமைப்பின் தஞ்சை தலைவர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் சந்திப்பு

மதுரை

எம்.ஏ. தொல்லியல் படிப்பு எம்.ஏ. வரலாறு படிப்பிற்கு நிகரல்ல என்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் திரும்பப் பெறக் கோருமாறு சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது. அவரிடம் இந்த அரசாணையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து SIO மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் வாஹித் எடுத்துரைத்தார். இவ்விஷயம் தனது கவனத்துக்கு வந்ததாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் வெங்கடேசன் கூறினார். சந்திப்பின்போது JIH மற்றும் SIOவின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

தஅவா பயிற்சி முகாம்

சென்னை

எஸ்ஐஓ உறுப்பினர்களுக்கான தஅவா பயிற்சி முகாம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐஐசி அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம், அதற்குரிய வழிமுறைகள் சார்ந்தும், அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் சார்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிற மதங்கள், நவீன கால சித்தாந்தங்கள் குறித்த விரிவான பார்வையை சிறப்புரையாளர்கள் வழங்கினர். நிகழ்வில் உரை, கலந்துரையாடல், PPT Presentation போன்றவை இடம்பெற்றன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Back To Top