Loading....

முஸ்லிம் தேர்வர்கள் பாதிப்பு: SET தேர்வு அட்டவணையில் மாற்றம் தேவை – SIO கோரிக்கை

தமிழகக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான SET தகுதித் தேர்வு சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தேதி முஸ்லிம் தேர்வர்களை பாதிக்கும் வகையில் உள்ளது.

ஆங்கிலம், வணிகம் போன்ற 6 பாடங்களுக்கு 07.06.2024 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குத் தேர்வு நடைபெறும் என தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதைக் கருத்தில் கொள்ளாமல் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படியான அலட்சியப் போக்கால் முஸ்லிம் தேர்வர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

எனவே, முஸ்லிம் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறும் SET தேர்வுகளின் நேரத்தை மாற்றுமாறு தமிழக அரசு மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு SIO கோரிக்கை வைக்கின்றது.

ரஹமத்துல்லா,
மாநில கல்வி வளாகச் செயலாளர்,
SIO தமிழ்நாடு.

Back To Top