Loading....

ரம்ஜான் அன்று தேர்வு – தமிழக அரசுக்கு எஸ்ஐஓ கண்டனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான ஆன்லைன் தேர்வு ரமலான் பெருநாளான இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

இந்த அறிவிப்பு நேற்று இரவு 9 மணிக்குத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் தம் பண்டிகையைக் கொண்டாடக்கூடிய நாளில், அரசு விடுமுறை தினத்தில் இதுபோன்ற தேர்வுகளை வைப்பது ஏற்புடையதல்ல. முஸ்லிம் மாணவர்கள் தேர்வை எழுதக் கூடாது என்ற நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. முஸ்லிம் சமூகத்தை அலட்சியப்படுத்தும் போக்கு இது.

இந்தத் தேர்வு அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உயர்கல்வித் துறை இதில் தலையிட்டு இன்று நடக்க உள்ள தேர்வை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், ரம்ஜான் பண்டிகை அரசு விடுமுறை தினம் என தெரிந்தும் இன்று ஆன்லைன் தேர்வு நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்ஐஓ கேட்டுக்கொள்கிறது.

முஹம்மது ஜாஃபார்,

மாநில இணைச் செயலாளர்,

எஸ்ஐஓ தமிழ்நாடு.

Back To Top